நாளை பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா
பண்ணாரி அம்மன் கோயில்
குண்டம் விழா செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) நடைபெற உள்ளது. இதையொட்டி,
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர்.
பிரசித்தி
பெற்ற அருள்மிகு பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா மார்ச் 23-ஆம் தேதி
பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி, கோயிலில் தினமும் சிறப்பு
வழிபாடு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள்
குண்டம் இறங்கும் விழா செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) காலை 4 மணிக்கு
நடைபெறும். இதில், லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
இதையொட்டி, பக்தர்கள் வசதிக்காக கோயில் வளாகத்தில் அலுமினிய பந்தல்
அமைக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இரவு குண்டத்தில் தீ வார்க்கப்படுவதற்கு
தேவையான 5 டன் வேம்பு, ஊஞ்சல் மர விறகுகளை பக்தர்கள் காணிக்கையாக வழங்கி
வருகின்றனர். இவ்வாறு வழங்கப்பட்ட விறகுகள் கோவில் குண்டம் முன் அடுக்கி
வைக்கப்பட்டு வருகிறது.
குண்டம் இறங்கும் பக்தர்கள் புதன்கிழமை முதலே கோயிலுக்கு வரத் துவங்கிவிட்டனர். கர்நாடகத்தைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மாட்டு வண்டிகளில் குடும்பம், குடும்பமாக வந்து கோயிலில் முகாமிட்டுள்ளனர். மேலும் திருச்சி, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிய துவங்கிவிட்டதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பக்தர்களின் வசதிக்காக, உணவு, குடிநீர், சுகாதாரம், தங்கும் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துவருகின்றனர். கோவை, சேலம், உதகை, கோத்தகிரி, குன்னூர், கோபி, அந்தியூர், ஈரோடு மற்றும் கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் ஆகிய இடங்களில் இருந்து அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சத்தியில் இருந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து வீதம் நூற்றுக்கணக்கான அரசு சிறப்பு பேருந்துகள் பண்ணாரிக்கு இயக்கப்படுகின்றன.
குண்டம் இறங்கும் பக்தர்கள் புதன்கிழமை முதலே கோயிலுக்கு வரத் துவங்கிவிட்டனர். கர்நாடகத்தைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மாட்டு வண்டிகளில் குடும்பம், குடும்பமாக வந்து கோயிலில் முகாமிட்டுள்ளனர். மேலும் திருச்சி, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிய துவங்கிவிட்டதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பக்தர்களின் வசதிக்காக, உணவு, குடிநீர், சுகாதாரம், தங்கும் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துவருகின்றனர். கோவை, சேலம், உதகை, கோத்தகிரி, குன்னூர், கோபி, அந்தியூர், ஈரோடு மற்றும் கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் ஆகிய இடங்களில் இருந்து அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சத்தியில் இருந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து வீதம் நூற்றுக்கணக்கான அரசு சிறப்பு பேருந்துகள் பண்ணாரிக்கு இயக்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment