பெரும்பள்ளம் அணை நீர்த்தேக்கப் பகுதியில் உயிருக்கு போராடும் பெண் குட்டியானை
சத்தியமங்கலம், மார்ச் 31:
பெரும்பள்ளம்
அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேற்றில் சிக்கி உயிருக்கு
போராடிக்கொண்டிருக்கும் குட்டியானைக்கு வன கால்நடை மருத்துவக்
குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறது.
சத்தியமங்கலம்
அடுத்துள்ள குத்தியாலத்தூர் வனத்தையொட்டி அமைந்துள்ளது பெரும்பள்ளம் அணை.
இந்த வனப்பகுதியில் உள்ள காட்டுயானைகள் அங்குள்ள நீர்தேக்கப்பகுதியில்
தண்ணீர் குடித்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை
காலை அங்கு தண்ணீர் குடிக்க வந்த யானைகூட்டத்தில் 5 வயதுள்ள குட்டியானை
மட்டும் சேற்றில் சிக்கிக்கொண்டது. அதனுடன் வந்த யானைகள் குட்டியை மீட்க
போராடின.இதற்கிடையில்,நோயால் பாதிக்கப்பட்டு சோர்ந்து போன குட்டியானை
சேற்றில் சுருண்டு விழுந்தது.அதனால் எழுந்து நிற்க முடியாதபடி உடல் நிலை
மோசமடைந்தது. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு குட்டியை மீட்க முடியாமல்
யானைகள் காட்டுக்குள் சென்றுவிட்டது. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர்
பாதிக்கப்பட்ட குட்டியானைக்கு குளுகோஸ் செலுத்தி அதனை காப்பாற்றும்
முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
0 comments:
Post a Comment