குண்டம் விழா: பண்ணாரிஅம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
சத்தியமங்கலம்,ஏப்ரல் 2 :
பண்ணாரி்அம்மன்
கோவில் குண்டம் விழாவையொட்டி, பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வரத்
துவங்கியுள்ளனர். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வதால்
வியாழக்கிழமை முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரசித்தி
பெற்ற அருள்மிகு பண்ணாரி்அம்மன் கோவில் குண்டம் விழா ஏப்.7-ஆம் தேதி
நடைபெறுவதையொட்டி, மார்ச் 23-ஆம் தேதி முதல் கோவிலை சுற்றியுள்ள
கிராமங்களில் பண்ணாரிஅம்மன் சப்பரம் வீதி உலா நடைபெற்றது. அதனைத்
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி
நடைபெற்றது. இதில் சிக்கரம்பாளையம், புதூர், வெள்ளியம்பாளையம் புதூர்
மற்றும் காளிதிம்பம் மலைவாழ்மக்கள் கலந்துகொண்டனர். கோவில் முன் உள்ள
பிள்ளையார், முருகன், வனதேவதைகள் சருகு மாரியம்மன், மாதேஸ்வரன் ஆகிய
தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அக்னி குழிக்கம்பம் போடும்
நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, அக்னி
குழிக்கம்பத்தில் இருந்து எழுந்த தீயை சுற்றியபடி மலைவாழ்மக்கள் தாரை,
தப்பட்டை பீனாட்சி வாத்தியத்துடன் கூடிய அம்மன் புகழ்பாடும் களியாட்டம்
நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் நிகழ்ச்சி 7-ஆம் தேதி
செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான
பக்தர்கள் பங்கேற்பர் என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் 10 இடங்களில்
நிழல்தரும் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, சேலம், மைசூர், ஆணைக்கட்டு,
பெருந்துறை, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள்
வரத் துவங்கியுள்ளனர். இதையடுத்து, பக்தர்களின் பாதுகாப்பு கருதி 3
அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment