தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 1, 2015

 திம்பம் மலைச்சரிவில் சுற்றுலா வேன் கவிழ்ந்தது 2 பேர் பலி




சத்தியமங்கலம்,மார்ச் 29:
திம்பம் மலைச்சரிவில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் வேன் ஓட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். அதில் பயணம் செய்த 19 பேர் காயமடைந்தனர்.

மதுரையை அடுத்துள்ள மேலூரைச் சேர்ந்தவர்கள் ராஜாமுகமது(72),பர்கானாபேகம்(81). இவர்களுக்கு மகன், மகள், பேரக்குழந்தைகள் என மொத்தமாக 18 பேர் உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள்  வேன் ஒன்றில் சில தினங்களுக்கு முன் மதுரையில் இருந்து புறப்பட்டு மைசூருக்கு சுற்றுலாவாக சென்றனர். வேனை ஓட்டுநர் ஆசைராஜ் நாடார்(41) ஓட்டினார். மைசூரில் சனிக்கிழமை இரவு தங்கி விட்டு, அனைவரும்  ஞாயிற்றுக்கிழமை காலை வேனில் புறப்பட்டு சத்தி நோக்கி வந்துகொண்டிருந்தனர்.  இதில் 9 ஆண்கள் உட்பட 21 பேர் இருந்தனர்.

இந்நிலையில்,  ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணி அளவில் தி்ம்பம் 3-ஆவது வளைவு பாதையில் வேன்  சென்று கொண்டிருந்தபோது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அப்போது, வேன் நிலைதடுமாறி சாலையோர தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 40 அடி மலைச்சரிவில் உருண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் ஆசைராஜ்நாடார்(45),  நாசர்அலி(32) ஆகியோர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர்.  விபத்தில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் அலறல் சப்தம் கேட்டு அவ்வழியாக வந்த பயணிகள் பண்ணாரி சோதனை சாவடிக்கு தகவல் தெரிவித்தனர். 

அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்,லாரி ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள், விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அனைவரும் மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மீட்பு வாகனம் மூலம் வேன் மீட்கப்பட்டு, சத்திக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இச்சம்பவத்தையடுத்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பவயிடத்தை ஆய்வுசெய்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவர்,சிறுமிகளை பார்த்து அவர்கள் ஆறுதல் கூறினர். இந்த விபத்து குறித்து சத்தி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment