தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 7, 2015

 குண்டம் விழாவுக்கு சென்ற பெண் யானை தாக்கி பலி 



பு.புளியம்பட்டி, ஏப்.7–
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மசாத்தாள் (வயது 55). இவரும் இவரது மகன் நாகராஜனும் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவில் கலந்து கொள்ள புளியம்பட்டியில் இருந்து பாத யாத்திரையாக கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
நேற்று இரவு 9.10 மணியளவில் பவானிசாகர் நான்குரோடு பகுதியில் நடந்து சென்றனர். அவர்கள் பின்னால் மேலும் சில பக்தர்களும் நடந்து வந்தனர். ரோட்டின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி ஆகும்.
அப்போது ரோட்டோரம் ஒருமரத்தின் அடியில் யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. தாயும், மகனும் ரோட்டில் நடந்து வந்ததை கண்ட அந்த யானை ஆவேசத்துடன் அவர்களை நோக்கி ஓடி வந்தது.
இதை எதிர்பார்க்காத அவர்கள் சத்தம் போட்டு கொண்டே உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினர். யானையும் விடாமல் விரட்டி பெண் பக்தர் மசாத்தாளை துதிக்கையால் தூக்கி வேகமாக வீசியது.
தன் கண் முன் தாயை யானை தூக்கி வீசியதை கண்ட மகன் நாகராஜன் வெல வெலத்து போனார். கூக்குரலிட்டார். அப்போது பின்னால் நடந்து வந்த மற்ற பக்தர்கள் யானையை விரட்ட ஓசை எழுப்பியபடி வந்தனர். இந்த சத்தத்தை கேட்டு மிரண்ட யானை பிறகு திரும்பி சென்றுகாட்டுக்குள் புகுந்தது. இதனால் நாகராஜன் உயிர் தப்பினார்.
இந்த நிலையில் யானையால் தூக்கி வீசப்பட்ட மசாத்தாள் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு ஒரு டவுன் பஸ்சில் ஏற்றி புளியம்பட்டிக்கு கொண்டு சென்றனர். பிறகு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
யானை தாக்கப்பட்டு பெண் பக்தர் பலியான சம்பவத்தை கேட்டு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினர் யாரும் அங்கு வராததால் ஆத்திரமும் கொண்டனர். பிறகு அவர்களை கண்டித்து பவானிசாகர்– மேட்டுபாளையம் ரோட்டில் அமர்ந்து இரவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதையொட்டி சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்தனர். மேலும் பண்ணாரி குண்டம் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தியும் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியல் நடத்தியவர்களிடம் சமரசம் செய்தார். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு பக்தர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் நள்ளிரவில் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

0 comments:

Post a Comment