கோலாகலமாக துவங்கியது பண்ணாரியம்மன் கோயில் விழா
சத்தியமங்கலம்,மார்ச் 24:
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அருள்மிகு பண்ணாரியம்மன் கோயில் விழா திருப்பூச்சாட்டுதலுடன் திங்கள்கிழமை இரவு கோலாகலமாக துவங்கியது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அருள்மிகு பண்ணாரியம்மன் கோயில் விழா திருப்பூச்சாட்டுதலுடன் திங்கள்கிழமை இரவு கோலாகலமாக துவங்கியது.
தமிழக காநாடகத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரியம்மன் கோயில் விழா
ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள்
பங்கேற்று தீ மிதிப்பர்.
இந்தாண்டுக்கான விழா திங்கள்கிழமை இரவு மலைவாழ்மக்களின் தாரைதப்பட்டை வாத்தியங்கள் முழங்க திருப்பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி, பண்ணாரி தெப்பகுளத்தில் அமைந்துள்ள சருகு மாரியம்மன் மற்றும் லிங்கேஷ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தப்பட்டன. அதன்பிறகு, சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம் மற்றும் இக்கரைத் தத்தப்பள்ளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராமமக்கள் கோயிலில் விழா நடத்த அம்மனிடம் பூவரம் கேட்டனர்.
அம்மனிடம் இருந்து வரம் கிடைத்ததும் சுமாமிக்கு சிறப்புபூஜைகள் செய்து விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய துவங்கினர். இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர், பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் சிக்கரசம்பாளையம், இக்கரைநெகமமன்புதூர், தத்தப்பள்ளி, வடவள்ளி, குய்யனூர் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
விழாவையொட்டி, பல்வேறு கிராமங்களில் அம்மன் சப்பரத்தில் திருவீதியுலா வந்து சென்றால் கிராமங்கள் செழிக்கும் என்பது ஐதீகம். இதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு கோயிலில் இருந்து புறப்பட்ட அம்மன், புதன்கிழமை சிக்கரசம்பாளையத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும். அதனைத் தொடர்ந்து, அம்மன் வீதியுலா நிறைவுற்று மார்ச்.31ம் தேதி கோவிலை வந்தடையும்.
இந்தாண்டுக்கான விழா திங்கள்கிழமை இரவு மலைவாழ்மக்களின் தாரைதப்பட்டை வாத்தியங்கள் முழங்க திருப்பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி, பண்ணாரி தெப்பகுளத்தில் அமைந்துள்ள சருகு மாரியம்மன் மற்றும் லிங்கேஷ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தப்பட்டன. அதன்பிறகு, சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம் மற்றும் இக்கரைத் தத்தப்பள்ளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராமமக்கள் கோயிலில் விழா நடத்த அம்மனிடம் பூவரம் கேட்டனர்.
அம்மனிடம் இருந்து வரம் கிடைத்ததும் சுமாமிக்கு சிறப்புபூஜைகள் செய்து விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய துவங்கினர். இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர், பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் சிக்கரசம்பாளையம், இக்கரைநெகமமன்புதூர், தத்தப்பள்ளி, வடவள்ளி, குய்யனூர் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
விழாவையொட்டி, பல்வேறு கிராமங்களில் அம்மன் சப்பரத்தில் திருவீதியுலா வந்து சென்றால் கிராமங்கள் செழிக்கும் என்பது ஐதீகம். இதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு கோயிலில் இருந்து புறப்பட்ட அம்மன், புதன்கிழமை சிக்கரசம்பாளையத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும். அதனைத் தொடர்ந்து, அம்மன் வீதியுலா நிறைவுற்று மார்ச்.31ம் தேதி கோவிலை வந்தடையும்.
0 comments:
Post a Comment