சத்தி முள்ளூர் மாகார்சி அம்மன் கோவில் விழா
சத்தியமங்கலம், மார்ச் 24:
சத்தியமங்கலம் முள்ளூர் மாகார்சி அம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலம் முள்ளூர் மாகார்சி அம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆண்டவர்நகர் முள்ளூர் மாகார்சி அம்மன் கோவில்
விழா கணபதி செவ்வாய்க்கிழமை காலை பூஜையுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து,
ராமர் கோவிலில் இருந்து புறப்பட்ட பக்தர்கள் பவானிஆற்றில் இருந்து
தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு
சிறப்புபூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது. விழா
ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுத் தலைவர் எஸ்.என்.மாரப்பன் தலைமையில்
பக்தர்கள் செய்திருந்தனர்.
0 comments:
Post a Comment