அவிநாசி வாசிக்கிறது!
***************************
***************************
புன்செய்
புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் அவிநாசியில் முதல்முறையாக
புத்தக திருவிழா மார்ச் 13 முதல் 17 வரை ஐந்து நாட்கள் தேவாங்கர் திருமண
மண்டபத்தில் நடைபெறுகிறது.
அவிநாசி புத்தக திருவிழாவை
முன்னிட்டும், புத்தகம் வாசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி சாந்தி வித்யாலயா
மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் அவிநாசி வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி
நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் மோகன்குமார் தலைமை
தாங்கினார். சமூக ஆர்வலர்
வி.பி.முருகானந்தன் முன்னிலை வகித்தார். புத்தகம் வாசிப்பதன் அவசியம்
குறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் பேசினார். பின்னர்
பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட 500 இகும் மேற்பட்டோர் புத்தகம்
வாசித்தனர்.
அவிநாசி புத்தக
திருவிழா குறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறி
இருபதாவது. இளைய தலைமுறையிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில்
அவிநாசியில் முதல்முறையாக புத்தக திருவிழா மார்ச் 13 முதல் 17 வரை ஐந்து
நாட்கள் தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரதி புத்தகாலயம் , விகடன் பதிப்பகம், தமிழ் தேசம் புத்தக நிலையம், ஸ்டுடண்ட் புக் ஹவுஸ், லாவா புக்ஸ், ரீடிங் இந்தியா புக்ஸ், விவேகானந்தா புத்தகாலயம், ஸ்பைடர் புக்ஸ், புக் வேர்ல்ட் உள்ளிட்ட 25 இகும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்கங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு தலைப்புகளில் இலட்சகணக்கான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் ஒரே இடத்தில கிடைக்க உள்ளது.கல்வி குறுந்தகடுகளும் கிடைக்கும். புத்தக கண்காட்சியில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 % சிறப்பு தள்ளுபடி வழங்க படுகிறது.
தினசரி மாலை 6 .30 மணிக்கு தலை சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழுவுகள் நடைபெறுகிறது. மார்ச் 13 ஆம் தேதி எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் பேசுகிறார். மார்ச் 14 ஆம் தேதி சமூக ஆர்வலர் வி.பி.முருகானந்தன் பேசுகிறார். மார்ச் 15 ஆம் தேதி பேராசிரியர் சூரிய நாராயணன் பேசுகிறார். மார்ச் 16 ஆம் தேதி திருமதி சித்ரா சுப்ரமணியன் பேசுகிறார். மார்ச் 17 ஆம் தேதி நிறைவு விழாவில் தாகம் கலைக்குழுவின் பல்சுவை கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
அவிநாசி புத்தக திருவிழாவின் ஐந்து நாட்களிலும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களும், பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
இக்கண்காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரதி புத்தகாலயம் , விகடன் பதிப்பகம், தமிழ் தேசம் புத்தக நிலையம், ஸ்டுடண்ட் புக் ஹவுஸ், லாவா புக்ஸ், ரீடிங் இந்தியா புக்ஸ், விவேகானந்தா புத்தகாலயம், ஸ்பைடர் புக்ஸ், புக் வேர்ல்ட் உள்ளிட்ட 25 இகும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்கங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு தலைப்புகளில் இலட்சகணக்கான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் ஒரே இடத்தில கிடைக்க உள்ளது.கல்வி குறுந்தகடுகளும் கிடைக்கும். புத்தக கண்காட்சியில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 % சிறப்பு தள்ளுபடி வழங்க படுகிறது.
தினசரி மாலை 6 .30 மணிக்கு தலை சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழுவுகள் நடைபெறுகிறது. மார்ச் 13 ஆம் தேதி எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் பேசுகிறார். மார்ச் 14 ஆம் தேதி சமூக ஆர்வலர் வி.பி.முருகானந்தன் பேசுகிறார். மார்ச் 15 ஆம் தேதி பேராசிரியர் சூரிய நாராயணன் பேசுகிறார். மார்ச் 16 ஆம் தேதி திருமதி சித்ரா சுப்ரமணியன் பேசுகிறார். மார்ச் 17 ஆம் தேதி நிறைவு விழாவில் தாகம் கலைக்குழுவின் பல்சுவை கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
அவிநாசி புத்தக திருவிழாவின் ஐந்து நாட்களிலும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களும், பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment