திம்பம் மலைப்பாதையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து. ஒருவர் பலி. இருவர்
காயம்
சத்தியமங்கலம், மார்ச்.7. சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்ட ஊசி வளைவுகள் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இம்மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றுமு கர்நாடக மாநிலத்திற்கிடையே 24 மணிநேரமும் பேருந்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு பால் டேங்கர் லாரி திம்பம் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. லாரியை திருநெல்வேலியை சேர்ந்த டிரைவர் பால்ராஜ்(40) ஓட்டினார். சத்தியமங்கம் சி.ஆர்.கிரேன் நிறுவனத்தில் ஆபரேட்டர்களாக பணிபுரியும் கோபிசெட்டிபாளையம் சந்திராபுரம் கஸ்பா வீதியை சேர்ந்த செந்தமிழ்செல்வன்(23), சேலம் எடப்பாடி, வேம்பட்டியை சேர்ந்த செந்தில் (28) ஆகியோர் ஆசனூரிலிருந்து லாரியில் சத்தியமங்கலம் செல்வதற்காக லிப்ட் கேட்டு ஏறி உடன் வந்தனர். லாரி 27 வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு மலைச்சரிவில் உருண்டு 25 வது கொண்டைஊசிவளைவு அருகே சாலையில் வந்து கொண்டிருந்த நிலக்கரி பாரம் ஏற்றி லாரியில் பக்கவாட்டில் மோதி நின்றது. இவ்விபத்தில் செந்தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆசனூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த பால்ராஜ் மற்றும் செந்திலை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த செந்தமிழ்செல்வன் பிரேதத்தை பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இவ்விபத்து காரணமாக தமிழகம் கர்நாடக மாநிலத்திறற்கிடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
0 comments:
Post a Comment