பவானிசாகரில் குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வுப் பேரணி
சத்தியமங்கலம்
தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புண்ர்வு வாரத்தையொட்டி பவானிசாகரில் புதன்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
பவானிசாகர்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணியை பவானிசாகர்
ஒன்றியக்குழு தலைவர் வி.ஏ.பழனிச்சாமி கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்த
பேரணியானது காவல்நிலையம், பஸ்நிலையம் மற்றும் மார்க்கெட்சதுக்கம் வழியாக
பள்ளியை வந்தடைந்தது. குடிநீர் மற்றும் சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வு
வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ மாணவியர் ஏந்திச் சென்றனர்.மேலும்,
பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் குறித்த துண்டுப்பிரசுரங்கள்
விநியோகிக்கப்பட்டன. இப்பேரணியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தாமணி,
சத்தி உட்கோட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய உதவி செயற்பொறியாளர்
மணிவண்ணன், ஈரோடு மாவட்ட துணை நிலநீர் வல்லுனர்கள் மணி, துரைசாமி மற்றும்
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்
0 comments:
Post a Comment