வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் மூலம் புதிய யுக்திகள் உருவாகும்:
மத்திய தகவல் தொழில்நுட்ப மதிப்பீட்டுகுழு செயலாளர் பிரபாத்ரஞ்சன்
சத்தியமங்கலம்,மார்ச் 21:
வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் மூலம் புதிய யுக்திகள் உருவாகும் என மத்திய தகவல் தொழில்நுட்ப மதிப்பீட்டுகுழு செயலாளர் பிரபாத்ரஞ்சன், சனிக்கிழமை பண்ணாரிஅம்மன் கல்லூரியில் நடந்த ஆண்டுவிழாவில் மாணவர்களுக்கு ஆலோசனை தெரிவித்தார்.
வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் மூலம் புதிய யுக்திகள் உருவாகும் என மத்திய தகவல் தொழில்நுட்ப மதிப்பீட்டுகுழு செயலாளர் பிரபாத்ரஞ்சன், சனிக்கிழமை பண்ணாரிஅம்மன் கல்லூரியில் நடந்த ஆண்டுவிழாவில் மாணவர்களுக்கு ஆலோசனை தெரிவித்தார்.
சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை
நடைபெற்ற கல்லூரிஆண்டுவிழாவிற்கு கல்லூரித் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம்
தலைமை வகித்தார். கல்லூரியில் சிறந்த மாணவராக ஜெ.மதேஸும் சிறந்த மாணவியாக
பி.எல்.நந்தினிமீனாளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்
சுப்பையன் விருதை வழங்கி மத்திய தகவல் தொழில்நுட்ப மதிப்பீட்டுகுழு
செயலாளர் பிரபாத்ரஞ்சன் பேசியது:
வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் மூலம் புதிய யுக்திகள் உருவாகின்றன. தகவல் தொழில்நுட்ப மதிப்பீடு குழுவானது இலவச காப்புரிமையை பெற்று தருகிறது. இந்த காப்புரிமை தொழில்நுட்ப பரிமாற்றம் செய்ய உதவும். மென்பொருகள் உருவாக்குவதைவிட அதன் உதிரிபாகங்களை தயாரிப்பு நல்ல வளர்ச்சியை தரும். மாணவர்களிடம் உள்ள பலத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார். அதைத்தொடர்ந்து, பல்வேறு துறைகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ.8.82 மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன. இக்கல்லூரியில் இயந்திரவியல் துறை மாணவர் கோகுலச் செல்வனுக்கு டாக்டர் விஸ்வநாதன் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை ஆர்.எஸ்.பி.எல். நிறுவன செயலாளர் ஜி.ஶ்ரீ.வித்யா, கல்லூரி ஆலோசகர் எம்.விஜயகுமார், முதல்வர் த.சரவணன், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட மாணவ,மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் மூலம் புதிய யுக்திகள் உருவாகின்றன. தகவல் தொழில்நுட்ப மதிப்பீடு குழுவானது இலவச காப்புரிமையை பெற்று தருகிறது. இந்த காப்புரிமை தொழில்நுட்ப பரிமாற்றம் செய்ய உதவும். மென்பொருகள் உருவாக்குவதைவிட அதன் உதிரிபாகங்களை தயாரிப்பு நல்ல வளர்ச்சியை தரும். மாணவர்களிடம் உள்ள பலத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார். அதைத்தொடர்ந்து, பல்வேறு துறைகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ.8.82 மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன. இக்கல்லூரியில் இயந்திரவியல் துறை மாணவர் கோகுலச் செல்வனுக்கு டாக்டர் விஸ்வநாதன் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை ஆர்.எஸ்.பி.எல். நிறுவன செயலாளர் ஜி.ஶ்ரீ.வித்யா, கல்லூரி ஆலோசகர் எம்.விஜயகுமார், முதல்வர் த.சரவணன், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட மாணவ,மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment