பண்ணாரிஅம்மன் கோவிலில் நடைபெற்ற கோமாதா பூஜை
ஈரோடு புறநகர் மாவட்ட பேரவை சார்பில் பண்ணாரிஅம்மன் கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற கோமாதா பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலிலிதா மீண்டும் முதல்வராக வேண்டி
பண்ணாரி்அம்மன் கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற கோமாதா பூஜைக்கு
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என்.டி.தோப்பு வெங்கடாசலம் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், புறநகர் மாவட்ட பேரவை செயலாளர்
எஸ்.எஸ்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவிலில் உள்ள 16
பசுமாடுகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு
பூக்கள் தூவி, பழம் கொடுத்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, கோவிலில்
சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, கோவில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதான
நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில்
சத்தி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சி.என்.மாரப்பன், சத்தி நகர்மன்றத்
தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், பவானிசாகர் ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிசாமி,
சத்தி ஒன்றிய பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன் , மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர்
எஸ்.கே.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment