தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 1, 2014

இருண்டு கிடக்கின்ற இந்தியா விடிய வேண்டுமானால்,இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.
பு.புளியம்பட்டி தேர்தல் பிரச்சாரத்தில் நாஞ்சில் சம்பத் பேச்சு.
 
 
 
 
பு.புளியம்பட்டி;மார்ச்;31;

    இருண்டு கிடக்கின்ற இந்தியா விடிய வேண்டுமானால்,இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். என பு.புளியம்பட்டி தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணா தி.மு.க.கொள்கைபரப்பு துணைசெயலாளர்
 நாஞ்சில் சம்பத் .பேசினார்.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க.வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து,அண்ணா தி.மு.க.கொள்கைபரப்பு துணைசெயலாளர் நாஞ்சில் சம்பத் ,புன்செய்புளியம்பட்டி  நகரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.நிகழ்ச்சிக்கு நீலகிரி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அமைப்பு செயலாளர் ஏ.,கே.செல்வராஜ்,எம்.பி, தலைமைதாங்கினார்.சுற்றுச்சுழல்
துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

   கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது; நடைபெறுகிற குருஷேத்திர யுத்தமாகிய நாடாளுமன்ற தேர்தலில் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட போகின்ற இந்தியாவின் பிரதமரை அடையாளம் காட்டுகின்ற தேர்தல்.அண்ணா தி.மு.க.வின் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் முதல்வர் ஜெயலலிதா.காங்கிரஸ் பிடியில் இருந்து இந்தியாவை மீட்கவேண்டியது நமது அனைவரின் கடமை.இந்தியாவில் ஒரு வரலாற்று மாற்றம் வரப்போகிறது.இந்தியாவை ஆளும் வல்லமை உள்ள ஒரே தலைவி ஜெயலலிதா. இந்தியாவின் பிரதமர் மகுடம் தமிழகதிற்கு கிடைக்க அண்ணா தி.மு.க.வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும்.40 தொகுதிகளிலும் அமோக வெற்றிபெற்று முதல்வர் அம்மாவை பிரதமர் ஆக்கவேண்டும்.

  இருண்டு கிடக்கின்ற இந்தியா இனிமேல் விடிய வேண்டுமானால்,அது,சந்தியா மகளால் தான் முடியும்.என்கின்ற சரித்திர சகாப்தம் நிகழ வேண்டும்.காங்கிரசையும்,தி.மு.
க.வையும் குழி தோண்டி புதைக்கவேண்டும். ஜப்பானில் தயாரிக்கப்படும் ரோபோக்களுக்கெல்லாம் ரோல் மாடல் பிரதமர் மன்மோகன் சிங்.அது சோனியாவின்  ரிமோட் கண்ட்ரோல்க்குதான் வேலை செய்யும்.
      தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என மு.க.ஸ்டாலின்  இங்கு பிரச்சாரம் செய்துள்ளார்.வடமாநிலங்களில், தெலுங்கானா, பிரச்சனை  உள்ளது போல் தமிழ்நாட்டில் கலவரம் நடக்கிறதா?.சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது. மக்கள் அமைதியாக உள்ளனர்.இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இந்தியா  அமைதியாக திகழ அண்ணா தி.மு.க.வின் முதல்வர் ஜெயலலிதா பாரத பிரதமராக அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற  செய்யவேண்டும்.இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

     பிரச்சாரத்தில்,பவானிசாகர் தொகுதி செயலாலரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான எஸ்.ஆர்.செல்வம்,,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம்,மாவட்ட அவைத்தலைவர் நல்லூர் சுப்ரமணியம்,பவானிசாகர் ஒன்றியகுழு தலைவர் வி.ஏ.பழனிசாமி,
நகர அ.தி.மு.க.செயலாளர் எம்.கே.ராஜேந்திரன்,நகராட்சி துணை தலைவர் டி.பாபு,நகர அவைத்தலைவர் ஜெயசேகர்,
 மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற  துணை செயலாளர் கே.ஜி.கோபால், நகர அம்மா பேரவை செயலர் ராமசாமி, இளைஞர் அணிசெயலாளர் சக்திசண்முகம்,அம்மா பேரவை தலைவர் மயில்சாமி, தொழில்சங்க செயலர் மூர்த்தி, நகர துணை செயலர் நாகராஜ், நகர எம்.ஜி.ஆர் மன்ற   செயலாளர் பி.ஏ .பாலன் ,சைக்கிள் பொன்னுசாமி,  மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், மகளிரணி செயலர்கள், கழக சார்பு அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட அண்ணா தி.மு.க தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

0 comments:

Post a Comment