தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, March 28, 2016

புன்செய் புளியம்பட்டியில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி



புன்செய் புளியம்பட்டி மார்ச் 29:

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் 100 % வாக்குபதிவை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் வாக்கு முத்திரை போன்ற வடிவில் நின்று மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். அப்போது மாணவர்கள் தமிழகம் வாக்களிக்கிறது( vote for tamilnadu )  என்றவாறு பதாகைகளை கைகளில் ஏந்தி நின்றனர். மேலும் மாணவ மாணவியர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்!, உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம்!, வளமான தமிழகம் அமைய அனைவரும் வாக்களிப்போம்! வாக்களிப்பது பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம் என்பது போன்ற கோசங்களை எழுப்பினர்.

இந்நிகழ்ச்சியில் புன்செய் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் முத்து, விடியல் சமூகநல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், தலைவர் தருமராசு, பொருளாளர் லோகநாதன், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், சிந்தாமணி வித்யாலயா பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் மொழிஸ் பெண்கள் சிறுதொழில் பயிற்சி மைய மாணவிகள் உள்பட 500 இயக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment