தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, March 28, 2016

தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா. பூசாரி ஒருவர் மட்டுமே தீ மிதிக்க அனுமதி. பொதுமக்கள் தீ மிதிக்க அனுமதி இல்லை.







தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் அபிசேக ஆராதனை, அம்மன் மலர் ஊஞ்சல் வழிபாட்டுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மனுக்கு அபிசேக பூஜை நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை மலர் அலங்கார தரிசனமும், பின்னர் அம்மன் திருவீதி உலா மைசூர் சாலை, திப்பு சர்க்கிள், பஸ்நிலையம், தலமலை ரோடு, ஒசூர் ரோடு, தொட்டகாஜனூர் சாலை, நாயக்கர் வீதி பகுதிகளில் நடைபெற்றது. தாளவாடி நகர்ப்பகுதி முழுவதும் வீதிகளில் கோலமிட்டு அம்மனை வரவேற்று வழிபட்டனர். பின்னர் நேற்று காலை 9 மணிக்கு மலர் ஊஞ்சல் நடைபெற்றது. முன்னதாக சுவாமி அம்பேத்கார் வீதியில் உள்ள விநாயர்கோயிலுக்கு வரும்போது மலர்ப்பாதை மீது நடந்து வந்து விநாயகர் வழிபாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோயில் முன் தயார் செய்யப்பட்ட குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து காலை 9.40 மணியளவில் கோயில் பூசாரி சிவண்ணா குண்டம் இறங்கினார். பின்னர் விசேச பூஜை, தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி கரகாட்டம், நையாண்டி மேளம், சண்டி மேளம், வீரபத்ரா நடனம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தாளவாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தாளவாடி மலைப்பகுதிகளில் உள்ள கோயில் குண்டம் திருவிழா நிகழச்சிகளில் கோயில் பூசாரி மட்டுமே குண்டம் இறங்குவது வழக்கம். மேலும் இப்பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் குண்டம் திருவிழா நடைபெறுவது தனிச்சிறப்பு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தால் தாளவாடி நகர்ப்பகுதியில் எந்த விழாவிற்கும் மைக் செட் வைக்க அனுமதியில்லை.

0 comments:

Post a Comment