பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிவு. நீர்த்தேக்கப்பகுதியில் முழ்கியிருந்த டணாய்க்கன் கோட்டை கோயில்கள் தெரிகின்றன.
பவானிசாகர் , மார்ச்.29. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் அணை நீர்தேக்கப்பகுதியில் முழ்கியுள்ள டணாய்க்கன் கோட்டை என் அழைக்கப்படும் பகுதியில் உள்ள மாவராய பெருமாள் கோயில் முழுவதுமாக தெரிகிறது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு,
திருப்பூர், கருர் மாவட்டங்களில் 250000 ஏக்கர் நிலம் பாசன வசதி
பெறுகின்றது. தற்போது அணையின் நீர்மட்டம் 52 அடியாக குறைந்து விட்டதால் அணை
நீர்தேக்கப்பகுதியில் உள்ள பழங்கால கோயில்கள் மற்றும் டணாக்கன்கோட்டை
வெளியே தெரிகின்றன. கடந்த 1948 ம் ஆண்டு பவானியாறும் மோயாறும்
கூடுமிடத்தில் கீழ்பவானி அணை கட்டும் பணி துவங்கியது. இதனால்
அணைப்பகுதியில் இருந்த 5 க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பண்ணாரி
வனப்பகுதியில் நிலம் வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். அணைக்குள் இருந்த
பழமை வாய்ந்த கோயில்களில் உள்ள விக்கிரகங்கள் பத்திரமாக எடுத்து வரப்பட்டு
பவானிசாகரில் கீழ்பவானி வாயக்காலின் வலதுபுறத்தில் கோயில் கட்டப்பட்டு
விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 1953 ல் குடமுழுக்கு செய்யப்பட்டது.
அணைக்குள் நீரில் மூழ்கிய கிராமங்கள் இருந்த சுவடு காணாமல் போய்விட்டன.
ஆனால் டணாய்க்கன் கோட்டையில் உள்ள மாதவராய பெருமாள் கோயில், சோமேஸ்வரர்
மங்களாம்பிகை கோயில், பீரங்கித்திட்டு போன்றவை நீர்மட்டம் கு¬ற்ந்த
காலத்தில் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. தற்போது அணையின் நீர்மட்டம் 52
அடியாக உள்ளதால் மாதவராய பெருமாள் கோயில் முழுவதுமாக காட்சியளிக்கிறது.
கோயில் உள்பிரகாரத்தில் 32 தூண்கள் அழகாக அமைக்கப் பட்டுள்ளது. இன்னும் 10
முதல் 12 அடி வரை நீர்மட்டம் குறைந்தால் சோமேஸ்வரர் மங்களாம்பிகை கோயில்,
பீரங்கித்திட்டு முழுவதுமாக காட்சியளிக்கும்.
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்கள் இவை என கல்வெட்டுக்கள் மற்றும் வரலாறுகளில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இக்கோயில்களை பொதுமக்கள் சென்று பார்க்க வசதி இல்லை. எனவே அணையில் நீர்மட்டம் குறைந்த காலங்களில் இக்கோயில்களை காண பொதுப்பணித்துறை படகு வசதி ஏற்படுத்தி தரவேண்டுமென பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்கள் இவை என கல்வெட்டுக்கள் மற்றும் வரலாறுகளில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இக்கோயில்களை பொதுமக்கள் சென்று பார்க்க வசதி இல்லை. எனவே அணையில் நீர்மட்டம் குறைந்த காலங்களில் இக்கோயில்களை காண பொதுப்பணித்துறை படகு வசதி ஏற்படுத்தி தரவேண்டுமென பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment