சத்தியமங்கலம் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் தீவிபத்து. விரைந்து அணைத்ததால் பல லட்ச ருபாய் பணம் தப்பியது
சத்தியமங்கலம் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.
|
சத்தியமங்கலம்,
மார்ச்.24. சத்தியமங்கலம் & மைசூர் சாலையில் சத்தியமங்கலம்
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே இந்தியன் வங்கி ஏடிஎம் உள்ளது. நேற்று
காலை 10 மணியளவில் இந்த ஏடிஎம் அறையிலிருந்து திடீரென புகை வந்தது.
இதைக்கண்ட அப்பகுதி மக்களும் அருகே இருந்த இந்தியன் வங்கி கிளை
அதிகாரிகளும் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல்
தெரிவித்தனர். இதையடுத்து தீயணப்பு நிலைய அலுவலர் ஜெகதீஸ்வரன் தலைமையில்
தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புகை பரவிய இடத்தில்
வாயுவை பீய்ச்சியடித்து அணைத்தனர். ஏடிஎம் இயந்திரம் அருகே
வைக்கப்பட்டுள்ள யுபிஎஸ் இயந்திரத்தின் மின்சாதனத்தில் ஏற்பட்ட கோளாறு
காரணமாக தீப்பிடித்து புகை ஏற்பட்டுள்ளது என தீயணைப்புத்துறையினர் கூறினர்.
விரைந்து தீயை அணைத்தால் ஏடிஎம் இயந்திரத்திலிருந்த பல இலட்சம் ருபாய்
பணம் தப்பியது. இந்நிலையில் தீ விபத்து காரணமாக சாலையில் போக்குவரத்து
நெரிசல் ஏற்படடதால் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து
போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஏடிஎம் அறையில் ஏற்பட்ட தீ
விபத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
0 comments:
Post a Comment