சத்தியமங்கலத்தில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான பொது தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி
சத்தியமங்கலம் ஜனவரி 12:
புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் கோயம்புத்தூர்
சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவ
மாணவியர்களுக்கான பொது தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி விடியல் வழிகாட்டி-2015
சத்தியமங்கலம் வரதம்பாளையம் ஜே.கே.பி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். சங்கரா
அறிவியல் & வணிகவியல் கல்லூரி முதல்வர் எஸ்.நடராஜன் தலைமை தாங்கினார்.
சங்கரா பாலிடெக்னிக் முதல்வர் எஸ்.கணேஷ் முன்னிலை வகித்தார். தேர்வு
ஆலோசனை கையேட்டினை சங்கரா கல்வி நிறுவனங்களின் துணை செயலாளர் சாகேத்
இராமச்சந்திரன் வெளியிட்டார். லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி இயக்குனர்
பாஸ்கோ இறையன்பு வாழ்த்துரை வழங்கினார். மாணவர்கள் பொதுத்தேர்வை
தன்னம்பிக்கையுடன் எழுதுவது குறித்து பேராசிரியர் சூரியநாராயணன் சிறப்புரை
ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள் எவை? எப்படி படித்தால் 100 இக்கு 100 மதிப்பெண்கள் பெறலாம்? 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதுவது எப்படி? 12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? , இன்ஜினியரிங் கவுன்சலிங் செல்வது எப்படி? மாணவர்கள் உடல்நலத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?, மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வது எப்படி? என்பது குறித்து மாணவ மாணவியர்களுக்கு விளக்கமளிக்கபட்டது.
மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களில் படிக்க வேண்டிய முக்கிய பகுதிகள் குறித்து பாடவாரியாக ஆசிரியர்கள் உரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வினாவங்கி புத்தகம், தேர்வு ஆலோசனை கையேடு , குறிப்பேடு, பேனா ஆகியவை இலவசமாக வழங்கபட்டன.
இந்நிகழ்ச்சியில் சத்தியமங்கலம், வேடர்நகர், ராஜன்நகர், சிக்கரசம்பாளையம், ரங்கசமுத்திரம், கெம்பநாயகன்பாளையம், டி.ஜி.புதூர், தூக்கநாயகன்
பாளையம், ஏழூர், பெரியகொடிவேரி, பங்களாபுதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 20 இகும் மேற்பட்ட மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளை சார்ந்த 1000 மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் உறுப்பினர்கள் லோகநாதன், சக்திவேல் மற்றும் சங்கரா கல்வி நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள் எவை? எப்படி படித்தால் 100 இக்கு 100 மதிப்பெண்கள் பெறலாம்? 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதுவது எப்படி? 12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? , இன்ஜினியரிங் கவுன்சலிங் செல்வது எப்படி? மாணவர்கள் உடல்நலத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?, மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வது எப்படி? என்பது குறித்து மாணவ மாணவியர்களுக்கு விளக்கமளிக்கபட்டது.
மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களில் படிக்க வேண்டிய முக்கிய பகுதிகள் குறித்து பாடவாரியாக ஆசிரியர்கள் உரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வினாவங்கி புத்தகம், தேர்வு ஆலோசனை கையேடு , குறிப்பேடு, பேனா ஆகியவை இலவசமாக வழங்கபட்டன.
இந்நிகழ்ச்சியில் சத்தியமங்கலம், வேடர்நகர், ராஜன்நகர், சிக்கரசம்பாளையம், ரங்கசமுத்திரம், கெம்பநாயகன்பாளையம், டி.ஜி.புதூர், தூக்கநாயகன்
பாளையம், ஏழூர், பெரியகொடிவேரி, பங்களாபுதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 20 இகும் மேற்பட்ட மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளை சார்ந்த 1000 மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் உறுப்பினர்கள் லோகநாதன், சக்திவேல் மற்றும் சங்கரா கல்வி நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.
0 comments:
Post a Comment