திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கினார் ஸ்டாலின்
மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை ஆதரித்து
கன்னியாகுமரியிலிருந்து இன்று ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரக்
கூட்டத்தில் பேசிய அவர், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களைத்
தேடி வரும் கட்சி திமுக என தெரிவித்தார். மேலும் அவர், மத்திய அரசில்
இருந்த திமுக தமிழக மக்களைப் பற்றி கவலைப்படவில்லை என்பது தவறு.
சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தொடர்ந்து குரல்
கொடுத்தது. ஆனால் இந்த திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு செய்த
தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆட்சிக்கு வரும் முன் சேதுசமுத்திரத் திட்டம்
தேவை என கூறியதாக குற்றம்சாட்டினார்.
0 comments:
Post a Comment