மருத்துவகுணம் கொண்ட சுண்டைக்காய் வற்றல் வரத்து அதிகரிப்பு
நடப்பாண்டு மருத்துவ குணம் கொண்ட சுண்டைக்காய் வற்றல் வரத்து சென்ற ஆண்டைவிட கூடுதலாக உள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்தியமங்கலம்,பவானிசாகர்,
புன்செய் புளியம்பட்டி வட்டாரத்தில் சுண்டைக்காய் சாகுபடி
செய்யப்படுகின்றன. மேலும் பவானிசாகர் வனப்பகுதியில் சேகரிக்கப்படும்
சுண்டைக்காய் புன்செய் புளியம்பட்டி சந்தைக்கு விற்பனைக்கு
வைக்கப்பட்டுள்ளது. சுண்டைக்காய் சாகுபடி செய்யும் விவசாயிகள் அவற்றை
உடைத்து அதில் உள்ள விதைகளில் பாதியை நீக்கிவிடுகின்றனர். பின்னர், அதனை
களத்தில் உலரவைத்து விற்பனைக்கு கொண்டு வருவர். ஜூன் மற்றும் ஜூலை மாத இதன்
பருவ காலம். பல்வேறு பகுதிகளில் இருந்த கொண்டு வரப்பட்ட சுண்டைக்காய்
வற்றலை புன்செய் புளியம்பட்டியில் விற்பனைக்கு வந்து அவை கிலோ ரூ.70-வரை
விற்பனையானது.. கொள்முதல் செய்யப்பட்ட வற்றலை மூட்டைகளில் நிரப்பி
தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை,சென்னை, சேலம் பகுதிகளுக்கு அனுப்பி
வைத்தனர்.
இது குறித்து வியாபாரி சண்முகம்
கூறியது: சுண்டைக்காய் வற்றலை நீர்மோர், வற்றல்குழம்பு மற்றும் சித்த
மருத்துவதுக்கு பயன்படுகிறது. வற்றலை மீண்டும் உப்பு கலந்து உலரவைத்து
சமைத்து சாப்பிடுவர். ஒரு மூட்டையின் எடை 37 கிலோவாக இருக்கும். ஜூலை மாத
இறுதி வரை 600 மூட்டைகள் வரத்து வரலாம். சாரசரியாக வாரம் 150 மூட்டைகள்
விற்பனைக்கு வருகின்றது என்றார்
0 comments:
Post a Comment