பவானி சங்கமேஸ்வரர் கோவில் காணிக்கை ரூ. 5 லட்சம்
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 5 லட்சம் பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.
இரண்டு மாதங்களுக்குப் பின், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 19 உண்டியல்கள் துணை ஆணையர் பழனிகுமார், உதவி ஆணையர் சபர்மதி முன்னிலையில் திறக்கப்பட்டு பவானி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள், மனவளக்கலை மன்றத்தினர், கோவில் ஊழியர்களைக் கொண்டு எண்ணப்பட்டது.
இதில், சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல்களில் ரூ. 4 லட்சத்து 54 ஆயிரத்து 50-ம், யானை பராமரிப்புக்கு ரூ. 16 ஆயிரத்து 111-ம், பசு பராமரிப்புக்கு ரூ. 16 ஆயிரத்து 761-ம், பழனியாண்டவர் கோவில் உண்டியலில் ரூ. 12 ஆயிரத்து 525-ம், காசி விஸ்வநாதர் கோவில் உண்டியலில் ரூ. 3 ஆயிரத்து 446-ம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
மேலும், தங்கம் 25.50 மில்லி கிராம், வெள்ளி 90.10 மில்லி கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
மொத்தம் ரூ. 5 லட்சத்து 2 ஆயிரத்து 893 காணிக்கை இருந்தது. கண்காணிப்பாளர் பாலசுந்தரி, என்எஸ்எஸ் மாவட்டத் தொடர்பு அலுவலர் பி.கார்த்திகேயன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சந்திரன், ஆசிரியர்கள் சீனிவாசன், சிவகுமார் மேற்பார்வையில் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இரண்டு மாதங்களுக்குப் பின், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 19 உண்டியல்கள் துணை ஆணையர் பழனிகுமார், உதவி ஆணையர் சபர்மதி முன்னிலையில் திறக்கப்பட்டு பவானி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள், மனவளக்கலை மன்றத்தினர், கோவில் ஊழியர்களைக் கொண்டு எண்ணப்பட்டது.
இதில், சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல்களில் ரூ. 4 லட்சத்து 54 ஆயிரத்து 50-ம், யானை பராமரிப்புக்கு ரூ. 16 ஆயிரத்து 111-ம், பசு பராமரிப்புக்கு ரூ. 16 ஆயிரத்து 761-ம், பழனியாண்டவர் கோவில் உண்டியலில் ரூ. 12 ஆயிரத்து 525-ம், காசி விஸ்வநாதர் கோவில் உண்டியலில் ரூ. 3 ஆயிரத்து 446-ம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
மேலும், தங்கம் 25.50 மில்லி கிராம், வெள்ளி 90.10 மில்லி கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
மொத்தம் ரூ. 5 லட்சத்து 2 ஆயிரத்து 893 காணிக்கை இருந்தது. கண்காணிப்பாளர் பாலசுந்தரி, என்எஸ்எஸ் மாவட்டத் தொடர்பு அலுவலர் பி.கார்த்திகேயன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சந்திரன், ஆசிரியர்கள் சீனிவாசன், சிவகுமார் மேற்பார்வையில் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

0 comments:
Post a Comment