மல்லன் குழியில் சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் பீதி
சத்தியமங்கலம்,ஆக 10:
தாளவாடி வனத்தையொட்டி உள்ள மல்லன்குழி கிராமத்தில் உள்ள பாறை மீது சிறுத்தை அமர்ந்திருப்பதை பார்த்து கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தாளவாடி வனத்தையொட்டி உள்ள மல்லன்குழி கிராமத்தில் உள்ள பாறை மீது சிறுத்தை அமர்ந்திருப்பதை பார்த்து கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஆசனூர் புலிகள் காப்பகம், தாளவாடி வனச்சரகத்தில் உள்ளது மல்லன்குழி
கிராமம். வனத்தையொட்டியுள்ள இக்கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக
உள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் பயிர்களை காட்டுயானைகள்,
காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்குகள்
சேதப்படுத்துகின்றன. இரவு நேரத்தில் பயிர்களை சேதப்படுத்தும்
காட்டுவிலங்குகளை கிராமமக்கள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது,
மல்லன் குழி பகுதியில் அரசு உண்டு உறைவிடப்பள்ளிக்கான கட்டுமான நடைபெற்று
வருகிறது. இந்த கட்டுமானப் பணிக்கு தேவையான பொருகள்களை சப்ளை செய்யும்
ஒப்பந்ததாரர் சரவணன் என்பவர் செவ்வாய்க்கிழமை தாளவாடி நோக்கி
சென்றுகொண்டிருந்தார். அப்போது, சாலையில் இருந்து 50 அடி தொலைவில் உள்ள
மல்லன்குழி பாறை மீது சிறுத்தை அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி
அடைந்தார். அவர் தனது செல்போனில் சிறுத்தையை படம் பிடித்தார். இது குறித்து
அவ்வழியாக வந்து கொண்டிருந்த கிராம மக்களுக்கும் தகவல்
தெரிவிக்கப்பட்டது. பட்ட பகலில் கடும் வெயிலில் பாறை மீது அமர்ந்திருந்த
சிறுத்தை, அதே இடத்தில் நீண்ட நேரமாக காணப்பட்டது. 1 மணி நேரத்துக்கு
பிறகு சிறுத்தை காட்டுக்குள் சென்றுவிட்டது. மல்லன்குழியில் முதன்முறையாக
சிறுத்தையை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து
வனஅலுவலர் கூறுகையில் சிறுத்தை தனக்கு தேவையான இரையை சாப்பிட்டதால் அது
அங்கு ஓய்வெடுத்திருக்கலாம்.இதனால் அது எவரையும் அச்சுறுத்தவில்லை என்றார்

0 comments:
Post a Comment