தாளவாடியில் சர்வதேச மகளிர் தின விழா
சத்தியமங்கலம்,
மார்ச் 15: தாளவாடி சூசையபுரம் ஆஷாகேந்திரா மியூச்சுவல் பெனிபிட் வெல்பேர்
டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச மகளிர் தினம்
கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஜஸ்டின்
பிரான்சிஸ் தலைமை வகித்தார். தாளவாடி வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர்
ஆர்.ராஜம்மா, மைசூர் மத்திய பெண்கள் பெடரேஷன் அமைப்பின் கர்நாடக மாநில
ஒருங்கினைப்பாளர் டாக்டர் பரிமளா ஆகியோர் கலந்துகொண்டனர். தாளவாடி
ஊராட்சித் தலைவர் நஞ்சுண்டநாயக்கர் பேசுகையில், பெண்களின் பிரச்னைகள்
தீர்வு காணாமல் இந்த சமுதாயமும் முன்னேற வாய்ப்பில்லை. மகளிர் பிரச்னைக்கு
பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது மகளிரே என்றும் எந்த மதமானாலும்
பெண்களுக்கு என்று தனி சக்தியும் இடமும் உண்டு. அதை பெண்கள் கண்டறிந்து
வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். இதில் 500க்கும் மேற்பட்ட மகளிர்
சுயஉதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment