தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Wednesday, February 26, 2014
Posted By:jayakanthan | At:11:05 PM
Be the first to comment!
பதுல்லா: ஆசிய கோப்பை லீக் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்து
தனி ஆளாக போராடி வெற்றி தேடித்தந்தார் கேப்டன் விராத் கோஹ்லி. ஆசிய கோப்பை
ஒருநாள் கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. பதுல்லாவில் நேற்று
நடந்த லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய
கேப்டன் விராத் கோஹ்லி, பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆரம்பத்தில் புவனேஸ்
வரும், முகமது ஷமியும் ஓரளவுக்கு நன்றாக பந்து வீசினர். சம்சுர் ரஹ்மானை
(7) முகமது ஷமியும், மொமினுல் ஹக்கை (23) அஸ்வினும் வெளியேற்றினர். ஆனால்,
3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் முஷ்பிகுர் ரஹ்மானும், அனாமுல்
ஹக்கும் அபாரமாக விளையாடினர். இந்த ஜோடிக்கு இந்திய பந்துவீச்சாளர்களால்
எந்த நெருக்கடியும் தர முடியவில்லை. இந்திய பந்துவீச்சு படுமோசமாக
இருந்ததால், இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 133 ரன்களை சேர்த்தது. அனாமுல்
ஹக் (77) ஆரோன் பந்தில் வெளியேறினார்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment