இன்று பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா
பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு துவங்குகிறது.
மார்ச் 31-ஆம் தேதி பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன்
துவங்கியது. தொடர்ந்து, சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று
வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) நடைபெறுகிறது.
இதில், பங்கேற்க தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில்
இருந்தும் திரளான பக்தர்கள் கடந்த வாரம் முதலே வந்து குவிந்துள்ளனர்.
இதையடுத்து, திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் தீக்குண்டம் வார்க்கப்பட்டது. இந்த தீக்குண்டம் நள்ளிரவு 1 மணியளவில் பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கு ஏதுவாக சமன்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு குண்டம் திருவிழா துவங்குகிறது. முதலில் கோயில் பூசாரி குண்டம் இறங்குவார். அதைத் தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கித் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்துவர்.
இதையடுத்து, திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் தீக்குண்டம் வார்க்கப்பட்டது. இந்த தீக்குண்டம் நள்ளிரவு 1 மணியளவில் பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கு ஏதுவாக சமன்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு குண்டம் திருவிழா துவங்குகிறது. முதலில் கோயில் பூசாரி குண்டம் இறங்குவார். அதைத் தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கித் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்துவர்.





0 comments:
Post a Comment